முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு (வயது 61) திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஆஞ்சிபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்திய அணியில் 1978ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை விளையாடிய கபில் தேவ், 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை பெற்றுக்கொடுத்தவர் என்பது நினைவுகூறத்தக்கது.
No comments