பாடும் நிலா எஸ்.பி.பி காலமானார்..!

கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் உடல் நலக்குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. தென்னிந்திய திரை இசையை 50 ஆண்டுகளுக்கு மேலாக தனது அசாத்திய குரல் வளத்தால் ஆட்சி செய்த பாடும் நிலாவின் வாழ்க்கை பயணம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
பிரிட்டிஷ் ஆட்சிகால மதராஸ் மாகாணத்தில் இடம்பெற்றிருந்த, தற்போதைய ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1946 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி பிறந்தவர் ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்கிற எஸ்.பி. பாலசுப்பிரமணியம்..!
எஸ் பி சம்பமூர்த்தி - சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக கொணடம்பேட்டை கிராமத்தில் பிறந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இளம் வயதிலேயே இசைமீது கொண்ட ஆர்வத்தால், ஹார்மோனியம் ,புல்லாங்குழல் வாசிக்க கற்றுக்கொண்டார்.
தந்தையின் ஆசைப்படி அனந்தபூரில் உள்ள கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பில் சேர்ந்தார். அங்கு படிப்பை பாதியில் விட்டு சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் படிப்பில் சேர்ந்த எஸ்.பி.பி படிக்கும் போதே இசை நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றார்.
1964 ஆம் ஆண்டு அமெச்சூர் பாடகர்கள் இணைந்து தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் பரிசை பெற்றதால் பலரது கவனத்தை ஈர்த்தார்.
ஆரம்பகாலத்தில் எஸ்.பி.பி நடத்திய மெல்லிசைக்குழுவில் ஹார்மோனியம் மற்றும் ஹிடாரிஸ்டாக இருந்த ராசையாதான் பின்னாளில் இசைஞானி இளையராஜாவானார். கங்கை அமரனும் இந்த குழுவில் ஹிடாரிஸ்டாக இருந்துள்ளார்.
No comments