Header Ads

Header ADS

தனியார் பள்ளிகளில் முதல் தவணை கல்வி கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிப்பு



தனியார் பள்ளிகளில் முதல் தவணை கல்வி கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிப்பு

பள்ளி மாணாக்கர்களுக்கான கட்டணத்தில் 40 சதவீத கட்டணத்தை செலுத்துவதற்கான அவகாசத்தை செப்டம்பர் 30 வரை, உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக முதல் தவணையாக 40 சதவீதத்தைவிட கூடுதல் கட்டணத்தை பள்ளிகள் வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் ஆஜராகி விளக்கம் அளித்தார். பள்ளிகள் வெவ்வெறு பெயர்களில் கூடுதல் கல்வி கட்டணத்தை வசூலித்தால் அது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல் என நீதிபதி எச்சரித்தார்.

கூடுதல் கட்டணம் வசூலித்த பள்ளிகளின் பட்டியலையும், அவற்றின் மீதான நடவடிக்கையையும் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், பள்ளிக்கல்வி துறைக்கும் பாராட்டு தெரிவித்தார்.

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.